பொன்னியின் செல்வனுக்கு எம்ஜிஆர் சொன்ன அட்வைஸ்
ponniyin selvan தமிழில் இருக்கக்கூடிய முதன்மையான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரக் கூடியவர் மணிரத்தினம் இவருடைய இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்
இந்த திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது
அஜித்தின் 61வது படத்தின் அடுத்த ஷூட்டிங் வெளிநாடு செல்ல திட்டம்
ponniyin selvan இந்த நிலையில்தான் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் லான்ச் சென்னையில் நடந்த ஒரு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் ஏ ஆர் ரகுமான் யுவன் சங்கர் ராஜா என்று திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்
அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களுடைய மனதில் இருக்கக்கூடிய பலவற்றை பேசியிருக்கின்றனர்
அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் பேசும்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் உரிமையை எம்ஜிஆர் வைத்திருந்தார் அவரிடமிருந்து நான் வாங்கினேன் அப்போது அவர் இதை சீக்கிரமாக படமாக எடுத்து விடு என கூறினார்
என்னால் முடியவில்லை என்னிடமிருந்து பலரிடம் அந்த உரிமை சென்றது கடைசியில் வைராக்கியமாக இருந்து மணிரத்தினம் அதை படமாக்கி விட்டார் என்றும் உலக நாயகன் கமலஹாசன் கூறியிருக்கின்றார்.